
மதுரை மாவட்டம் உத்தங்கடியில் திமுக கட்சியின் தலைவரும் முதல் வருமான ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்த நிலையில் முதலில் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, பெரியார் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது திருவுருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பகல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது திமுகவில் புதிதாக இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி என இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் திமுகவில் ஏற்கனவே 23 அணிகள் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 25 அணிகள் இருக்கிறது.