இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீடிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.  ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட் பதவி காலம் முடிவடைந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் துணைப் பணியாளர்களுக்கான ஒப்பந்தங்களை நீட்டிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருடன் விக்ரம் ரத்தோர் (பேட்டிங் பயிற்சியாளர்), பராஸ் மாம்ப்ரே (பந்துவீச்சு பயிற்சியாளர்), மற்றும் டி திலீப் (பீல்டிங் பயிற்சியாளர்) ஆகியோர் தொடர்வார்கள்.