
தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு தொகுதி மறு வரையறை செய்தால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார். இதற்காக மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி மொத்தம் 45 கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
தொகுதி மறு வரையறை தொடர்பாக தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே உறுதியளித்தார். இந்த நிலையில் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.