அதிமுக கட்சியின் வட்டச் செயலாளராக இருப்பவர் ராஜசேகர்.இவரை தற்போது சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியில் ஆளில்லா இடத்தில் வைத்து மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை தடுக்க சென்ற ஒருவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த ராஜசேகர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.