
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது மதுரை அருகே தாக்குதலுக்கு உள்ளான வீ.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை ஆர்பி உதயகுமார் இன்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் பார்ப்பதற்காக சென்றார்.
அப்போது அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஆர்பி உதயகுமார் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இதன் காரணமாக ஆர்பி உதயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.