இந்தியாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு நடத்தும் திட்டம் 2025-26 ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.