சென்னை தீவுத்திடலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், பல்வேறு இடங்களில் மீட்புப் பணி நடைபெற்று வருவதால் கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.