
இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டி தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதை ஆகிவிட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் 14 பேரை அவர்கள் கைது செய்ததுடன் 2 விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.