
தமிழ் நிலப் பரப்பிலிருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியது மு.க ஸ்டாலின் அறிவித்தார். சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில் நுட்பம் தமிழ் நிலத்தில் தான் அறிமுகம் ஆனது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் கால கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கிமு 4000 ஆண்டில் முற்பகுதிக்கு கொண்டு சென்றதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இரும்புக்காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில் ஊழலையும் ஒழிக்க வேண்டும். ஊழல் ஒழிப்பிலும் உலக அளவில் முன்னோடியாக இருக்க வேண்டும். சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.