சென்னையில் தொடரும் ஈமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையம் என அனைத்து இடங்களுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்தனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தலைமை பதிவாளருக்கு வந்த ஈமெயில் மிரட்டலை அடுத்து நீதிமன்ற வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. ஈமெயில் மூலம் மிரட்டல் விடும் டார்க் நெட் குற்றவாளிகளைப் பிடிக்க சென்னை மத்திய சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.