உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள டி.ஏ.வி பி.ஜி. பட்டப்படிப்புக் கல்லூரியில் நடந்த ஒரு அதிர்ச்சிச் சம்பவம் வெளியே வந்துள்ளது. பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவரான 24 வயது உஜ்வல் ராணா, ₹7,000 நிலுவைத் தொகையைக் கட்டாததால் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.
இதனால் மனமுடைந்த அந்த மாணவர், சனிக்கிழமை அன்று வகுப்பறைக்குள்ளேயே தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். மேலும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் நிலை குறித்துப் பேசியதற்காகக் கல்லூரி நிர்வாகம் தன்னை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“Main fees nahi de paya, toh principal ne mera exam form jama karne se rok diya.”🥲
A heartbreaking incident took place at DAV College, where a BA student named Ujjwal Rana allegedly set himself on fire after being denied permission to submit his exam form due to unpaid fees. pic.twitter.com/ChAcGmNmJX
— Oppressor (@TyrantOppressor) November 9, 2025
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கல்லூரியின் முதல்வர் பிரதீப் குமார், உயிரிழந்த மாணவர் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார். “அந்த மாணவனின் செல்போன் விலை ₹25,000, அவனது மோட்டார் சைக்கிள் மதிப்பு ₹1 லட்சம். ஆனால், ₹7,000 கட்டணத்தைச் செலுத்த அவனிடம் பணமில்லை” என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
He is Pradeep Kumar Singh, Principal of the DAV college where a student attempted self immolation over fees dues. Pradeep Singh while speaking to media said:
“He (Ujjawal Rana) owns a ₹25k worth mobile. Drives a motorcycle worth ₹1 lakh. How is he poor or Dalit?” https://t.co/IzwYmJ5Yes pic.twitter.com/0hNs9oRqcP
— Piyush Rai (@Benarasiyaa) November 9, 2025
இதற்கிடையில், தீக்குளிப்பதற்கு முன்பு உஜ்வல் ராணா ஒரு வீடியோ மற்றும் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதீப் குமார் தன்னைத் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தான் உதவி கேட்டபோது போலீசாரும் கல்லூரி நிர்வாகத்துக்கே ஆதரவளித்ததால், நம்பிக்கை மற்றும் நீதியின் மீதுள்ள பிடிப்பு தனக்குத் தொலைந்துவிட்டதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
