கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதோர் தற்போதுவிண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். முன்னதாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர் கடந்த 18ம்தேதி முதல் 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அதே கால அவகாசத்தில் ஏற்கனவே விண்ணப்பிக்காதோரும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது