திமுக முன்னாள் துணை பொதுச் செயலாளர் சற்குண பாண்டியனின் மருமகளும், ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெ.,வை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன், இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்த அவர் அதிமுகவில் ஐக்கியமானது திமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த சில நாள்களாக அவர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.