
இந்திய ரயில்வே துறை ரயில் பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதற்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியல் இதுவரை வெளியிடப்பட்டது.
ஆனால் தற்போது ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியல் வெளியிடும் புதிய நடைமுறையை ரயில்வே நிர்வாகம் சோதனை செய்து வருகிறது. அதன் முதற்கட்ட பணியாக ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இந்தத் திட்டத்தினை சோதனை செய்து வருகிறது.
அந்த சோதனையில் நடைமுறையில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இந்தத் திட்டத்தினை நாடு முழுவதும் அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியல் வெளியிடப்பட்டால், பயணிகள் தங்கள் பயணத்தில் மாற்றம், மீண்டும் பயண தேதிய திட்டமிட வசதியாக இருக்கும்.
மேலும் இத்திட்டத்தை குறித்து பயணிகளிடம் கருத்துக்கள் முழுவதுமாக பெறப்பட்டு அதன் பின் அது தொடர்பான அறிக்கைகள் ரயில்வே நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.