
வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி KK நகரை சேர்ந்த தம்பதியினர் விநாயகம் (33)- ஷோபனா (29). இவர்கள் இருவரும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் ஷோபனா தனது உறவுக்காரர்களிடமும், நண்பர்களிடமும் அதிக நேரம் செல்போனில் பேசுவதால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த மே 1ஆம் தேதி இரவு ஷோபனா வெகு நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை விநாயகம் கவனித்துள்ளார்.
அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விநாயகம் உனது பெற்றோரை வீட்டிற்கு வர சொல் அவர்களிடம் இது குறித்து பேச வேண்டும் என கூறிவிட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை 5 மணிக்கு ஷோபனா எழுந்து வழக்கம் போல வீட்டு வாசலில் கோலம் போட்டுவிட்டு 5.30 மணி அளவில் தனது கணவர் தூங்கிக் கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டியுள்ளார்.
ஏதோ சத்தம் கேட்டதால் விநாயகம் எழுந்து கதவை திறக்குமாறு ஷோபனாவை கூறியுள்ளார். ஆனால் கதவை திறக்காமல் ஹாலில் உள்ள மின்விசிறியில் சேலையால் ஷோபனா தூக்கு போட்டுக் கொண்டார். இதனை ஜன்னல் வழியே பார்த்த அவரது கணவர் அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.இது குறித்து அறிந்த அக்கப் பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே வந்ததும் உடனடியாக தூக்கில் தொங்கிய ஷோபனாவை கீழே இறக்கினர்.
அதன்பின் படுக்கையறை கதவை திறந்து விட்டனர். ஆனால் ஷோபனா அதற்குள்ளாகவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின் வழக்குப்பதிவு செய்து விநாயகம் மற்றும் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் தீவிர விசாரணையை நடத்த இருப்பதாக கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.