
சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தை தொடர்ந்து தூண்டி கோவம் அடைய செய்கிறார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சிங்கம், நெடுங்கால தூண்டுதலுக்கு பிறகு வெறித்தனமாக கோபம் கொண்டதாக மாறுகிறது.
View this post on Instagram
அந்த நபர், சிங்கத்தின் முகத்தை நெருங்கி கையால் தூண்டி கோவம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். அப்போது, வாய்ப்பு கிடைத்தவுடன், சிங்கம் தனது கூரிய நகத்தால் அந்த நபரின் கையை வேகமாக தாக்குகிறது. அந்த நபர் திடுக்கிட்டு, பயத்துடன் பின்வாங்குகிறார். அவரது முகத்தில் தெரியும் அதிர்ச்சி, வலியின் அடையாளமாக இருந்தது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது காட்டு விலங்குகளை தூண்டக் கூடாது என்பதற்கான பயிற்சி பாடம்” என கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் சிங்கத்தின் பொறுமையை பாராட்டினாலும், பெரும்பாலானோர் “விலங்குகள் எதையும் பொறுமையாக சகிக்காது, அவை விலங்குகள் தான்” என்பதைக் குறிப்பதாகவும் கூறுகின்றனர். கூண்டில் இருந்தாலும் ஒரு விலங்கு விலங்காகத்தான் பதிலளிக்கும் என்பதை இந்த வீடியோ நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.