இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அதற்கு முன்கூட்டியே இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமாவதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்களுக்கான சிரமங்கள் வெகுவாக குறையும். மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய முடியாதோ என்ற சந்தேகம் தேவை இல்லை. வழக்கமாக மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமை அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்படும். அதேபோன்று தற்போதும் மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வின் வரிசை எண் மற்றும் நுழைவுச்சீட்டு அடிப்படையில் மதிப்பெண்கள் பெறப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும் இன்று கூறப்பட்டுள்ளது.