தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் நடித்த பாகுபலி திரைப்படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனால் உலகம் முழுவதும் இவர் பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து இவர் ஸ்பிரிட் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை அனிமல் படத்தை இயக்கிய சந்திப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் நடிகை திரிஷா வில்லியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இந்தத் திரைப்படம் சுமார் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் பிரபாஸ் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படம் குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.