சேலம் மாவட்டத்தில் பாட்டாளி சொந்தங்களுடன் சந்திப்பு என்ற பெயரில் பாமக கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கட்சி நிர்வாகி முன்னிலையில் அன்புமணி பேசுகையில் இதே மாவட்டத்தில் அன்று தனியாக நின்று 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றோம். இப்போது கூட்டணியில் இருந்தும் 2 தொகுதிகளை தான் வென்றுள்ளோம். அப்படி என்றால் நாம் வளர்ந்து இருக்கின்றோமா.? இது வளர்ச்சியா.? என்ற கேள்வி எனக்குள் எழுகின்றது என்று கூறினார். மேலும் நாம் இழந்த வாக்குகளை எல்லாம் மீண்டும் வர வைக்க வேண்டும், அதுதான் உங்கள் கடமை சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. வெறியுடன் களத்தில் இறங்குங்கள் நம்மை போல யாராலும் முளைக்க முடியாது. ஆனால் ஏதோ ஒரு தொய்வு இருக்கின்றது நம் கட்சியின் மிகப்பெரிய சொத்து என் தம்பிகளும் தங்கைகளும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பணியாற்ற கூடியவர்கள்.

அவர்களுக்குள் வெறி இருக்கின்றது என்று கூறினார். மேலும் ஒரு சிலர் கூட்டணி கூட்டணி என்கின்றார்கள். நாம் தனியாக போட்டியிட்டால் கூட சேலம் மாவட்டத்தில் வெற்றி பெற முடியும் என்ற அளவிற்கு நாம் முளைக்க வேண்டும். அதோடு பாமகவிற்கு அதிக எம்.எல்.ஏ-க்களை கொடுத்துள்ள மாவட்டம் சேலம் மாவட்டம் எவ்வளவோ செய்திகளை மக்களிடம் சொல்லலாம். என்ன அண்ணாமலை அப்படி பார்க்கிற… உன்னையும் தான் சேர்த்து சொல்கிறேன். உன் தொகுதியில் வாங்கினியே ஓட்டு அது 52,000 வாக்குகள் வாங்கிய தொகுதி தெரியுமா..! இன்னும் 10 மாதங்கள் தான் இருக்கின்றது. பல்லை கடித்துக்கொண்டு களத்தில் இறங்குக… வெறி வருமா… என்ன உன் மூஞ்சிய பாத்தா வெறி வர மாதிரி தெரியலையே..! இரண்டில் ஒன்றை பார்த்து விடலாம் என்ன ராமகிருஷ்ணா கோபம் வந்திருச்சா..? என ஆவேசமாய் அவர் பேசினார்.