பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும், பாமக நிறுவனர் ராமதாசுக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்னும் சற்று நேரத்தில் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் அவரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

பாமகவில் தொடரும் குழப்பத்திற்கு தீர்வு காண இருவரும் விரைவில் சந்திப்பார்கள் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில், இன்று அன்புமணி ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று உள்ளார். இந்த சந்திப்பின் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு சமரசம் ஆகுமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது சந்திப்பிற்கு பின் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.