
அமெரிக்காவில் கடந்த மாதம் இரண்டாவதாக அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகம் மீதான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சட்ட விரோத குடியேறிகள் மற்றும் போதைப் பொருட்களை காரணமாக கூறி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25% வரி விதிப்பு அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சீனாவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கும் 10 % வரிவிதிப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகள் தனியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்கு சீனாவும், மெக்சிகோவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனால் கனடா, அமெரிக்க பொருள்களுக்கு 25% வரிவிதிப்பு அளித்துள்ளது. மேலும் டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பு குறித்து கூறியதாவது, 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மீதும் புதிய வரிகள் விதிக்கப்படும். அவர்கள் தொடர்ந்து நம்மை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே வரி விதிப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் நடக்கும் என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐரோப்பிய யூனியன் கூறியதாவது, டிரம்ப் ஐரோப்பிய யூனியன் மீது வரி விதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, கனடா, சீனா, மெக்ஸிகோ மீது அமெரிக்கா வரி விதிப்பு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இது பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தி பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். உலக மயமாக்கல் மூலம் அனைவரும் அனைத்தையும் பெற்று பயனடையும் சூழலில் ட்ரம்ப் உலக நாடுகளை துண்டாக்க முயற்சி செய்து வருகிறார் என ஜெர்மன் அதிபர் ஷோல்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரிக்ஸ் கூட்டமைப்பான இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் டாலர்களுக்கு பதிலாக கரன்சியை உருவாக்கினால் 100% வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தார். டிரம்பின் அடுத்தடுத்த அதிரடி முடிவுகளால் உலகில் வர்த்தக போர் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.