இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மனைவி முறையான உணவு முறையை பின்பற்றி 40 நாட்களில் கேன்சரின் கடைசி நிலையை கடந்து வென்றுள்ளார் என அவர் வெளியிட்ட கருத்து தற்போது பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தீஸ்கர் மாநிலம் மருத்துவ சொசைட்டி அவருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசில் மருத்துவருமான, சொசைட்டி உறுப்பினருமான குல்தீப் சோலங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அலோபதி மருந்துகள் இன்றி இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி சரியானது மிகவும் சந்தேகத்திற்குரிய ஒன்றாகும்.

எலுமிச்சை நீர், துளசி, வேப்பிலை, மஞ்சள் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி புற்றுநோயிலிருந்து வெளிவரலாம் என்ற தங்களின் கணவருக்குரிய மருந்து முறையை சரிதான் என்கிறீர்களா? என நவ்ஜோத் சிங் சித்து மனைவியிடமும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அலோபதி மருந்துகள் புற்றுநோயை குணப்படுத்தாது என்ற தவறான உண்மைக்கு முரண்பாடான தகவல்களை நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். அதற்குரிய மருத்துவ முறைக்கு உண்மையான சான்றையும் சொசைட்டிக்கு அளிக்க வேண்டும்.

மேலும் மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையெனில் ரூபாய் 850 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்களுக்கு அலோபதி மீதான நம்பிக்கையை குறைத்து அவர்களுக்கு மாற்று மருத்துவ முறையை அறிமுகப்படுத்தினால் அது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம் எனவே இது போன்ற தவறான தகவல்களை வெளியிடுவது தவறானது.