
சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது, தென் மாநிலங்களவை பிரதிநிதித்துவம் நிதி ஆணையத்தின் வரி வருவாய் பகிர்வு முறை குறித்தும் விவாதம் தேவை என்றும் கூறினார்.
அமெரிக்காவில் இருப்பது போல அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் உறுப்பினரை அளிக்க வேண்டும். நிதி ஆணையம் வரி வருவாயை பகிர்ந்து கொள்வதற்கு கடைப்பிடிக்கும் அம்சத்தால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றனர். தொகுதி மறுவரையறையில் தலித் சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.