
கன்னடம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. இவர் தமிழில் சமீபத்தில் விஜயுடன் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கில் நோட்டா என்ற திரைப்படம் மூலம் விஜய் தேவர் கொண்டாவுடன் ராஷ்மிகா நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்ததாக செய்திகள் பரவி வந்த நிலையில் இருவரும் அனைத்து இடங்களுக்கும் ஒன்றாக சென்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தன. இதனை அடுத்து தற்போது “புஷ்பா 2” திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ள ராஷ்மிகா.

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தீவிரமாக கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்மிகாவிடம் தொகுப்பாளர் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதாவது தங்களுக்கு கணவராக வருபவர் திரை உலகில் உள்ளவரா? அல்லது வெளியில் உள்ளவரா? என்ற கேள்வியை கேட்டார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா,”இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே”என சிரிப்போடு கூறினார். இதைக் கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்கள் உள்ளிட்டோர் ராஷ்மிகாவின் பதிலை கேட்டு ரசிப்போடு சிரித்தனர்.