அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் நாடுகடந்த அடிமை வர்த்தகத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச நினைவு தினமானது வருடந்தோறும் மார்ச் 25-ம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் இனவெறி மற்றும் தப்பெண்ணத்தின் ஆபத்துக்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

அதோடு பாதிக்கப்பட்டவர்களை நிரந்தரமாக கௌரவிக்கும் அடிப்படையில் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இனவெறி மற்றும் தப்பெண்ணத்தின் ஆபத்துகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 ஆம் தேதி அன்று அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் நாடுகடந்த அடிமை வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சர்வதேச நினைவு தினம் குறிக்கப்படுகிறது.

நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகம் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகங்களில் விழாக்கள் மற்றும் செயல்பாடுகளுடன் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது