
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் ரேகா குப்தா டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். முன்னதாக தேர்தலின் போது மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அதில் தகுதி உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 2500 வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக டெல்லி பட்ஜெட்டில் ரூ.5100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவு விரைவில் தொடங்கும் என்றும், இதற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.