
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை தவறாக சிலர் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். கேரளா சினிமா துறையில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகை ஶ்ரீ ரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தொல்லை தரும் நரியின் கதை இருக்கும்.
பெண்களுக்கு ஒரு இலக்கு இருக்கிறது. அதை அடைய முயற்சிக்கும் பெண்களை திமிர் பிடித்தவள் எனக் கூறுகின்றனர். பெண்கள் கடமையாக உழைக்கும் போது நிறைய தடைகள் இருப்பதை நாம் பார்க்க முடியும். அதனை கடந்து இலக்கை அடைய சில நரிகளுக்கு உடலை உணவாக விருந்தளிக்க வேண்டும். சில பெண்களும் துரதிஷ்டவசமாக அதனை ஆதரிக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வேகமாக பரவி வருகிறது.
Foxes story in Every girl’s life ,we want to achieve a small small achievements,wishes,goals will be there..if we fight with the dare! people will say she is an arrogant, she is not a good charecter woman..if she sacrifices her ethics for her goal if she sleeps with the…
— Sri Reddy (@SriReddyTalks) August 30, 2024