தெலுங்கானாவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் கொண்டா சுரேகா. இவர் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா பிரிந்ததற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் கொண்டா சுரேகா, கே.டி.ராமராவ் என்னை பற்றி ஆத்திரமூட்டும் கருத்துக்களை பதிவு செய்துள்ளார் பேசி வருகிறார். இதனால் அவரை விமர்சித்து பேசி இருந்தேன். அப்பொழுது தற்செயலாக ஒரு குடும்பத்தை குறிப்பிட்டு பேசி விட்டேன், எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. நான் வேறு ஒருவரை காயப்படுத்தி இருந்தால் எனது கருத்துக்களை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால் கே.டி.ராமராவ் விஷயத்தில் நான் பின்வாங்க மாட்டேன். அவர் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து நாகார்ஜுனா தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரைக் கெடுக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததற்காக அமைச்சர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து குறித்து அமைச்சர் பதிவிட்ட பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.