விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் வசிக்கும் சிவக்குமார் என்பவருக்கு கரண்குமார் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் தனது நண்பர்களுடன் பொதுவெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்ததோடு, அதனை தனது நண்பர்களுக்கும் காட்டியுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் அஜித்குமார் என்ற காவல் ஆய்வாளர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் சந்தேகமடைந்த காவல் ஆய்வாளர், அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து சோதனை செய்தார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.