
திருநெல்வேலி மாவட்டம் மேம்பாளையத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரன்குடி பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை பேசிய மாதேஸ்வரன் முதலில் சிறுமியை தூத்துக்குடிக்கு வரவழைத்துள்ளார்.
அதன்படி தூத்துக்குடிக்குச் சென்ற சிறுமி, அதன் பின்னர் அங்கிருந்து அவர் ராமநாதபுரத்திற்கு அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மேம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு மாதேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.