திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் அட்சயன் (15). இவர் அப்பகுதியில் உள்ள சிவன்மலை அருகே தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த ஜூன் 28ஆம் தேதி மதியம் 3.45 மணி அளவில் அட்சயன் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு நின்ற மரத்தில் இருந்த கிளை ஒன்று அட்சயன் மீது முறிந்து விழுந்தது.

வேகமாக விழுந்த மரக்கிளையால் படுகாயம் அடைந்த மாணவனை உடனடியாக ஆசிரியர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் மாணவனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அறிந்த காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.