அமெரிக்காவினல் உள்ள  சான்டியாகோ எல்லை ரோந்து பிரிவில் பணியாற்றி வந்த “பூ” என்ற நாயை, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஓட்டே மலை வனப்பகுதியில் கிலுகிலுப்பை விரியன் என்ற வகையான பாம்பு ஒன்று கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக கண்டறிந்து  நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், கடிக்கபட்ட “பூ” நாயை விமானம் மூலமாக லாமேசா பகுதியில் உள்ள அவசர கால விலங்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பூவுக்கு விஷத்திற்கெதிரான மருந்து கொடுக்கப்பட்டு தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாயின் நிலைமை சீராக உள்ளதென அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் எல்லைப் பாதுகாப்பு பணியில் நாய்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை எடுத்துக்காட்டுகிறது.

அவசர சிகிச்சை மற்றும் விமான உதவியின் மூலம், தூக்கிச் செல்லப்பட்ட பாதுகாப்பு  நடவடிக்கை மூலம் பூவின் உயிர் பாதுகாக்கப்பட்டது. CBP அதிகாரிகள் பூவின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்ள, மருத்துவ குழுக்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

CBP (Customs and Border Protection) அமைப்பின் கீழ் செயல்படும் நாய்களுக்கான சிறப்பு திட்டத்தில், நாடு முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட நாய்கள் பணி ஆற்றுகின்றன. இத்திட்டம், சட்ட அமலாக்கம், மயக்க மருந்துகள் மற்றும் மனிதக் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நாய்கள் எல்லை பாதுகாப்பு பணிகளில் மிகவும் முக்கியமான துணைவர்களாக விளங்குகின்றனர்.