திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் டீக்கடைகள் மற்றும் பழக்கடைகளில் பால் பாக்கெட்டுகள் திருட்டுக் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அதாவது திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள டீக்கடை, பழக்கடைகளில் அதிகாலையில் பால் பாக்கெட்களை விநியோகிஸ்தகர்கள் கடையின் முன்பு வைத்து செல்வது வழக்கம்.

கடை திறப்பதற்கு முன்பாகவே பால் பாக்கெட்டுகள் வைத்து செல்லப்படுவதை கண்டறிந்த மர்ம நபர் கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு டீக்கடையில் உள்ள பால்பாக்கெட்டுகளை திருடி சென்றுள்ளார்.

அதனை கவனித்த அப்பகுதியில் உள்ள ஒருவர் தட்டி கேட்கவே உடனே அந்த மர்ம நபர் பால்பாக்கெட்டுகளையும் தான் ஓட்டி வந்த பைக்கையும் அங்கே விட்டுவிட்டு ஓடிள்ளார்.

அதே போன்று வண்ணாரப்பேட்டையில் உள்ள முருகன் குறிச்சி நோக்கி செல்லும் சாலையில் வேறொரு பைக்கில் வந்த அதே மர்ம நபர் அங்குள்ள டீக்கடை முன் உள்ள 30லி பால்பாக்கெட்டுகளை திருடிச் சென்றுள்ளார்.

அந்தத் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தற்போது இச்சம்பவம் குறித்து விசாரணை ஈடுபட்ட காவல்துறையினர் அந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என டீக்கடைக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.