
சீனா கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக அளவில் முன்னணியில் வலுவாக மாறியுள்ளது. ஹ்யூமனாய்டு ரோபோக்கள் முதல் சுகாதார முறைமைகள் வரை பல துறைகளில் தொழில்நுட்பங்களை புதுப்பித்துவரும் சீனா, தற்போது “பேமெண்ட் பை பால்ம்” எனும் தொழில்நுட்பத்தை பரிசீலிக்கிறது.
வைரலாகிய வீடியோவில், ஒரு நபர் 7-Eleven கடையில் ஸ்பார்க்லிங் வாட்டர் வாங்கும் போது, கையை ஸ்கேன் செய்து அதன்மூலம் WeChat ஐடி வழியாக பணம் செலுத்துகிறார். இது அவரிடம் கார்டோ, பணமோ, தொலைபேசியோ இல்லாமலே நடைபெறுவது நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதோடு, இந்தியாவின் UPI மற்றும் Paytm போன்று செயலிகள் மற்றும் சீனாவின் கை மூலம் அடையாள பணப்பரிமாற்ற முறை இடையே ஒப்பீடுகளும் கிளம்பின.
Indians : Cash is the king
Meanwhile in china : pic.twitter.com/1jgpUnKzSO
— Coach Rajan (@sibalsahab) April 13, 2025
சிலர் “இந்தியா இன்னும் சில சிலை கட்டுகிற இடத்திலும், சீனா 50 ஆண்டுகள் முன்னேறி விட்டது” என விமர்சிக்க, மற்றொருபக்கம் “இந்தியாவில் கூட 10 ரூபாய் கொத்தமல்லிக்கே Paytm பயன்படுத்துகிறோம். இந்தியாவும் டிஜிட்டல் பேமெண்ட்டில் பிற நாடுகளுக்கு முன் இருக்கிறது” என பதிலளித்தனர்.
2023 மே மாதம் அறிமுகமான Weixin Palm Recognition சேவை, பீஜிங் விமான நிலைய எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஷென்ழென் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதத்திற்குள் இது குவாங்டோங் மாகாணத்தில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட 7-Eleven கடைகளில் பரவியது.
தற்போது, இத்தொழில்நுட்பம் power bank வாடகை நிலையங்கள், ரீடெயில், போக்குவரத்து, உடற்பயிற்சி மையங்கள் மற்றும் கல்வி துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பயனர்கள் ஒரு மொபைல் ஆப்பில் பதிவு செய்து, கையை ஸ்கேனரில் ஒத்திசைத்தால், உடனே பணம் செலுத்த முடியும்.