உலகிலேயே மிக உயரமான சிலை என்று அழைக்கப்படும். இந்திய விடுதலை இயக்கத்தலைவரான வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்ட ஒரு சிலையாகும். இந்த சிலை இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டம், கெவாடியா அருகே உள்ள சர்தார் சரோவர் அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றி அமைந்துள்ள ஜங்கிள் சபாரி வனப்பகுதிக்குள்  புத்தாண்டு நாள் அன்று ஜங்கிள் சபாரி பூங்காவின் எல்லை பகுதியை தாண்டி சிறுத்தை புலி ஒன்று நுழைந்துள்ளது.

இது அங்குள்ள கரும்புலி வகை மானை வேட்டையாடி உள்ளது. இதனை அடுத்து சிறுத்தை புலி வேட்டையாடியதை பார்த்த 7 மான்களும் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளன. இதனை அடுத்து மான்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பின் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி அக்னிஷ்வர் வியாஸ் கூறியதாவது, சர்தார் வல்லபாய் படேலின் சிலையை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தை புலிகள் உள்ளன. ஆனால் ஜங்கிள் சபாரிபகுதிக்குள்  சிறுத்தை புலி நுழைந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

இந்த சிறுத்தை புலி, கரும்புலி வகை மானை வேட்டையாடியது. இதனால் அச்சத்தில் மற்ற 7 மான்களும் உயிரிழந்துள்ளன. சிறுத்தை புலியை  வனத்துறை அதிகாரி ஒருவர் விரட்ட முயற்சித்த போதும் அது ஒரு மானை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜங்கிள் சபாரி சுற்றி 400 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இதில் சிறுத்தை புலி பூங்காவிற்குள் நுழையும் காட்சி பதிவாகியுள்ளது. இருப்பினும் இந்தப் பகுதியில் இருந்து  முழுவதுமாக சிறுத்தை புலி வெளியேறி உள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை எனக் கூறினார்.