தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் கார்த்தி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகியும் இருந்தது. தற்போது கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தை ராஜமுருகன் இயக்கி வருகின்றார். இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். 29 வயதாகும் இவர் கார்த்தியின் ரசிகராக இருந்து வந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பாக வினோத் உயிரிழந்த சூழ்நிலையில் ஷூட்டிங் முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பி இருந்த கார்த்தி வினோத்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.