
தெலுங்கானாவில் யூடியூபர் சன்னி யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று வீடியோக்களை வெளியிட்டு வந்தார். NIA அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் அவர் NIA அதிகாரியால் கைது செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் இவர் பந்தய செய்திகளை ஊக்குவித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற முயன்றார். அது பலன் அளிக்காததால் அவர் துபாய் சென்றார். அதன் பிறகு அவர் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடந்த போது அவர் பாகிஸ்தானில் இருந்ததாக அதிகாரிகள் சந்தேகம் அடைகின்றனர். அவர் கடந்த காலத்தில் 3 முறை பாகிஸ்தானுக்கு சென்று அவரது பயணத்தையும் பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளார்.
பைக்கில் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை விவரிக்கும் வீடியோக்களை எடுத்து அவர் வெளியிட்டார். மேலும் 2 யூடியூபர்களின் நடமாட்டம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எதற்கு பாகிஸ்தான் சென்றார்?. பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு செல்வதற்கான காரணம் என்ன?. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.