
துருக்கியில் சுற்றுலா பயணியாக இருந்த இந்திய சமூக ஊடக பிரபலம் ஒருவர், துருக்கி பெண்களைப் பற்றி பாலியல் ரீதியாக அவதூறான மற்றும் புண்படுத்தும் கருத்துக்களை வீடியோவில் வெளியிட்டதற்காக துருக்கி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆன்லைனில் “மாலிக் ஸ்வாஷ்பக்லர்” என்ற பெயரில் செயல்பட்டுவரும் இந்த யூடியூபர், யூடியூப், டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பிரபலமானவர் எனத் தெரிகிறது.
Turkish cops have nicked an Indian tourist after he posted offensive videos about Turkey on his YouTube channel, Malik Swashbuckler. He was caught slagging off Turkish women in Hindi, thinking they wouldn’t understand. The videos kicked off a storm online, which got him arrested. pic.twitter.com/jejqwIOi8L
— Julia Kendrick (@JuKrick) May 31, 2025
சம்பவத்துக்கான முக்கிய காரணம், அந்த நபர் துருக்கியில் உள்ள சந்தை ஒன்றில் ஒரு பெண்ணுடன் சுற்றிவந்தபின், கடைக்காரர்களிடம் “மூவர்ணக் கொடி இருக்கிறதா?” என கேட்டு திட்டியதுடன், மற்றொரு வீடியோவில் துருக்கிப் பெண்களை பற்றி மிகக் கீழ்த்தரமான பாலியல் கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யலாமா என கேட்டிருப்பது போன்ற கொடூரமான உரையாடலும் பதிவாகியுள்ளது. இது முதலில் இந்தியில் இருந்ததால் துருக்கி மக்களுக்கு புரியவில்லை. ஆனால், சில சமூக ஊடக பயனர்கள் அதை கொடியிட்டு வெளியிட, வீடியோ வைரலானது.
துருக்கி சமூக ஊடகங்களில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. விசாரணை தொடர்கின்ற நிலையில், அந்த நபரின் முழுப் பெயர் அல்லது சமூக ஊடக கணக்குகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
துருக்கி சட்டங்களின் படி, பொதுமரியாதையை மீறிய வகையில் நடந்துக்கொண்டதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து, துருக்கி குடிமக்கள், சுற்றுலா பயணிகளின் நடத்தைக்கு மதிப்புடன் கலாச்சாரத்தை புரிந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.