மும்பையின் வோர்லி பகுதியில் நடந்த சம்பவத்தில், ஒரு ஹஸ்கி நாய் தனது உரிமையாளரால்  வலுக்கட்டாயமாக லிஃப்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டதால், அந்த நாய் அருகில் இருந்த ரமேஷ் ஷா என்ற நபரின் கையை கடித்தது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில்  தெளிவாக பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்ட ரமேஷ் ஷா, அவரது மகன் மற்றும் வேலைக்காரனுடன் லிஃப்டில் இருந்த போது, நாய் கட்டுப்பாடின்றி உள்ளே வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில், நாயின் உரிமையாளர் ரிஷப் படேல் மீது ரமேஷ் ஷா போலீசில் புகார் அளித்தார். வழக்கு விசாரணையின் போது, ரமேஷ் ஷா மற்றும் அவரது வேலைக்காரர் சாட்சி அளித்தனர். அவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் உண்மையை உறுதிப்படுத்தின. வழக்கறிஞர் சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதாக வாதிட்டாலும், நீதிமன்றம் இந்த வாதங்களை ஏற்கவில்லை.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுஹாஸ் போசலே, “இது ஒருவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம். லிஃப்டில் இருந்த மற்ற நபர்களை பற்றிய கவலையில்லாமல் நாயை உள்ளே இழுத்துச் சென்றது தண்டனைக்கு உரியது” என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில், ரிஷப் படேலுக்கு 4 மாத கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் நினைவுபடுத்துகிறது.