
சீனாவில் யுன்கிங் ஜியான்(33), ஜூன்யோங் லிபு (34) என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் ஜூன்யோங் லிபு சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நோய்க் கிருமிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர்கள் அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் இதனை ஆராய்ச்சி செய்ய கடந்த ஜூலை மாதம் 2024 ஆம் ஆண்டு அமெரிக்க வந்தனர்.
அப்போது எப் பி ஐ அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சுங்கத்துறையினரிடம் இணைந்து விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த லிபுவிடம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆபத்தான நோய்க் கிருமியை அமெரிக்காவுக்கு கடத்தி வந்ததும், அது ஒரு பூஞ்சை என்றும் கூறப்படுகிறது. இது பயிர்களில் கருகல் ஏற்படுத்தும் மற்றும் ஒவ்வொரு பெரிய அளவிலான பொருளாதார இழப்புகளுக்கு காரணமாகிறது.
இந்த நோய் கிருமி கோதுமை, பார்லி, சோளம் மற்ற அரிசி ஆகியவற்றில் நோயை ஏற்படுத்தும். இது உணவில் கலந்தால் பயிர்களை அழித்து மனிதர்களுக்கு வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றது.
இந்நிலையில் இந்த நோய்க்கிருமியை அமெரிக்காவுக்கு கடத்தி வந்த லிபுவை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனை அவரது காதலியின் ஆராய்ச்சிக்காக கொண்டு வந்தது தெரியவந்ததை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.