மடிப்பாக்கம் பள்ளிகரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண் – சங்கவி தம்பதியினர். சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் இத்தம்பதியினர், 4 ஆண்டுகளாக மேங்கோ என்றநாயை  குழந்தையைப் போலவே வளர்த்து வந்தனர். தம்பதியினர் எங்கு சென்றாலும், காரில் சேர்ந்து மேங்கோவையும் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தம்பதியினர், மதுரையில் உள்ள அருணின் தாயார் வீட்டிற்கு நாய் மேங்கோவுடன் சென்றபோது, ஒரு நேரத்தில் வீட்டு கதவை திறந்தபோது, மேங்கோ தெருவில் சென்று காணாமல் போய்விட்டது. இது தம்பதியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தங்களது அன்பு நாயான மேங்கோவை தேட, மதுரை முழுவதும் சாலைகளில் போஸ்டர்களை ஒட்டிவிட்டு, தெருவெங்கும் தேட ஆரம்பித்தனர்.

தங்கள் மேங்கோவை கண்டுபிடிக்க உதவுவோருக்கு ரூ. 5,000 பரிசும் அறிவித்துள்ள இத்தம்பதியினர், சமூக வலைதளங்களிலும் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக WhatsApp வழியாக வெளிப்பட்ட தங்களது உருக்கமான உரையாடல், பலரின் மனதை நெகிழ வைத்துள்ளது. தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நண்பனாக மாறிய மேங்கோ இல்லாமல் சென்னைக்கு திரும்ப முடியவில்லை என அருண் உருக்கமாக கூறியுள்ளார்.

மேங்கோ, தம்பதியினரின் குழந்தையுடன் மிக நெருக்கமாக விளையாடி வந்தது. இந்நிலையில், தம்பதியினர் நாயின் புகைப்படம் மற்றும் தகவல்களுடன் மதுரையின் முக்கிய பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி, ஊருக்குள் முழுவதும் தேடிவருகின்றனர். மேங்கோவின் கழுத்தில் “மாங்கோ” எனும் பெயர் கொண்ட ஒரு பெல்டும், தொலைபேசி எண்ணும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் நாய் வளர்க்கும் நபர்கள், மேங்கோவைத் தேடுவதற்காக தம்பதியினருக்கு உதவ முன்வந்துள்ளனர். தங்கள் பாசப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்து, தங்கள் செல்ல நாயை மீண்டும் கண்டுகொள்வது மட்டுமே தம்பதியினரின் விருப்பமாக இருக்கின்றது.