
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே அருகே அமைந்துள்ள மாவல் தாலுகாவிற்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள டெகு பகுதியில் உள்ள இந்திராணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் நின்று கொண்டு ஆற்றை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.
அந்த விபத்தால் பாலத்தில் நின்று கொண்டிருந்த 26 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 20 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.