கலிபோர்னியாவில் வசித்து வரும் தம்பதியினர் மகன் நம்டி கிளன் ஒஹேரி(13). இவரது புனைப்பெயர் “டியூஸ்”. இவர் நான்கு குழந்தைகளில் முதல் குழந்தை ஆவார். இந்த நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி அவரது படுக்கையறையில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனை கவனித்த அவரது தாயார் உடனடியாக முதலுதவி செய்தார். அதே நேரத்தில் அவரது தந்தை அவசர எண்ணிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அக்கம், பக்கத்திடம் உதவியும் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் முயற்சிக்கும் சிறிது நேரத்திலேயே டியூஸ் இறந்துவிட்டதாக தெரியவந்தது.

டியூஸின் மரணம் தற்கொலை என பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் டியூஸின் பெற்றோர் தனது மகன் தற்கொலை செய்து கொள்வதற்கான எந்த ஒரு காரணமும் இல்லை. அவன் அவ்வாறு நடந்து கொள்ளவும் இல்லை என கூறியுள்ளனர். இதனை அடுத்து சமீபத்தில் வைரலாகி வரும் சமூக ஊடக சவால் மூலம் இறந்திருக்கலாம் என சந்தேகமடைந்தனர். இதனை அடுத்து நடத்திய விசாரணையில், சமூக ஊடகங்களில் “பிளாக் அவுட்” என்ற சவால் விளையாட்டின் மூலம் உயிரிழந்துள்ளார்என தெரிய வந்தது.

இந்த மூச்சுத் திணறல் சவால் பயனர்கள் தங்கள் மூச்சை பிடித்துக் கொள்ள ஊக்குவிக்கிறது. இது மிகவும் ஆபத்தான சவால். உயிருக்கு ஆபத்தான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் படி இந்த சவால் முதன்முதலில் ஆன்லைனில் 2018இல் தோன்றிய போது குறைந்தது 82 இளைஞர்கள் இந்த சவாலை முயற்சித்து உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இந்த சவாலில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சராசரி 13 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

இந்த சவாலின் மூலம் மூச்சை பிடித்து வைத்திருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தி சில நிமிடங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து டியூஸின் பெற்றோர், தங்களது மகனுக்கு சமூக ஊடகக் கணக்கு எதுவும் இல்லை. அவனது நண்பர்களின் மூலம் இந்த சவாலை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர். இதனை அடுத்து சிறுவனின் இறுதி சடங்கு பிப்ரவரி 14 அன்று நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.