ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்துள்ள பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் தொழிலாளி. இவருக்கு பிரகதீஷ் மற்றும் தினேஷ்(1) என்று 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே தினேஷ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வாளியில் உள்ள தண்ணீரைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வாளிக்குள் தலைக்குப்புற விழுந்து விட்டார். இதில் அவர் வாளிக்குள் இருந்த தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் தினசரி மீட்டர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.