
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு ஏற்கனவே காவல் தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததை அடுத்து தான் நீதிமன்றத்தை நாடியது ஆர்எஸ்எஸ். இதனையடுத்து 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு உள் அரங்க கூட்டத்தோடு நடத்துவதற்கு தனி நீதிபதி அனுமதியளித்தார். எனினும் இந்த கட்டுப்பாடுகள், அதாவது சுற்றுசுவருக்குகள் நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிவிசன் அமர்வு முன்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.
அப்போது வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுசாலைகளில் அணிவகுப்பு நடத்துவது என்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை. அதுமட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது என்றால் அதனை சரி செய்ய வேண்டியது காவல்துறையினரின் கடமை. எனவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணி வகுப்பு நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு பேரணி நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வானது அனுமதி வழங்கியது.
இதனைத்தொடர்ந்து மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பிற்கு அனுமதி தர கோரி டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் தான் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராகத்தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு உளவுத்துறையின் சார்பாக கொடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில் தான் தமிழ்நாடு காவல்துறை என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்புடைய அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததாகவும், அதனை கண்டு கொள்ளாமல் அரசினுடைய அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் வந்திருக்கிறது என சுட்டிக்காட்டி இந்த மேல்முறையீடு மனு என்பது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..