தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2022-2023 ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 10-ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகியவற்றிற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. எனவே தகுதி வாய்ந்த பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கான புதிய விண்ணப்பங்கள், சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், வருமான சான்றிதழ், சேமிப்பு கணக்கு புத்தகம், வருகை சான்றிதழ், தேர்ச்சி சான்றிதழ், ஆதார் ஆகியவற்றை வைத்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாயிலாக escholarship.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் பெண் கல்வி ஊக்குவிப்பு தொகை பெற வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக விண்ணப்பித்து பழங்குடியின மாணவ, மாணவிகள் பயன்பெறலாம் என கூறியுள்ளார்.
பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை….. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreகுட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…
Read more