சமூக வலைதளங்களில் தினமும் பல விசித்திரமான மற்றும் வேடிக்கையான காணொளிகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு நபரின் விசித்திரமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
பொதுவாகக் கடைகளுக்கு முன்னால் உள்ள தூசியைக் குறைக்க, கடை உரிமையாளர்கள் தண்ணீர் தெளிப்பது வழக்கம். ஆனால், தற்போது வைரலாகும் வீடியோவில், அந்த நபர் மழை பெய்து சாலைகள் நனைந்துள்ள நிலையிலும், தொடர்ந்து தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கிறார்.
மழையிலும் அவர் தனது வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இந்த விசித்திரமான காட்சியைப் பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு, “இயல்புநிலை அமைப்புகள் மட்டுமே செயல்படுகின்றன” என்று நகைச்சுவையாகக் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலர், “இவர் தனது வேலை மீது மிகுந்த அக்கறை கொண்ட உழைப்பாளி” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நபர் யார் அல்லது இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை என்றாலும், இந்த வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Default settings hi chal rahi hain 😂 pic.twitter.com/PEMxRE5Bp0
— Awanish Chaudhary (@Er_awanish) June 29, 2026
“>
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இதுபோன்ற தகவல்களை முழுமையாக உறுதிப்படுத்த முடியாது என்றாலும், இந்த வீடியோ மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
