தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் அவர்கள் “ஸ்போர்ட்ஸ்-அ எடு.. Drugs-அ விடு..” என்ற வெறித்தனமான அதிரடி முழக்கத்துடன் பிரம்மாண்ட போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான மற்றும் விறுவிறுப்பான நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது சொந்தக் கையால் எழுதி வெளியிட்ட அந்த விழிப்புணர்வு முழக்கம், தற்போது ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர்ந்து சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி மாஸ் ட்ரெண்டாகி வருகிறது.
Anti Drug Run 2026
CM. Vijay participats in Marathon in Chennai Marina.. 😍🏃♂️@actorvijay 🫶 pic.twitter.com/24U8vhIEst— 💕Marees💕 (@ItzmeMarees) June 26, 2026
சென்னை காமராஜர் சாலையில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற இந்த அதிரடி மாரத்தான் போட்டியில், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பந்தா ஏதுமில்லாமல், லட்சக்கணக்கான பொதுமக்களுடனும் இளைஞர்களுடனும் இணைந்து முதலமைச்சர் விஜய் அவர்களும் நேரில் பங்கேற்று ஓடியுள்ளார். தமிழ்நாட்டை போதை இல்லாத மாநிலமாக மாற்ற துடிக்கும் முதலமைச்சரின் இந்த அதிரடி ஆக்ஷனையும், எதார்த்தமான எளிமையையும் கண்டு வியந்து போன நெட்டிசன்கள், இந்த மாரத்தான் தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் வெறித்தனமாகப் பகிர்ந்து தங்களது பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.
