திருட்டு என்பது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும், அல்லது சிறிய பொருளாக இருந்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி ஒரு விசித்திரமான மற்றும் கண்டனத்திற்குரிய திருட்டுச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண் மிகவும் சாதாரணமாக ஒரு வீட்டின் கேட்டிற்கு அருகே வருகிறார். யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே நுழையும் அவர், அங்கிருந்த அழகான செடித் தொட்டிகளை ஒன்று விடாமல் அள்ளிச் செல்கிறார்.
Caught on CCTV: Woman Steals Full Plants From Private Property, Video Goes Viral pic.twitter.com/3ocy8RCtp1
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 5, 2026
ஒரு படித்த மற்றும் நாகரீகமான பெண்ணாகத் தோற்றமளிக்கும் அவர், இவ்வளவு அற்பமான ஒரு திருட்டில் ஈடுபட்டது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோவிற்கு “இப்படிப்பட்ட மனிதர்களால்தான் நாடு முன்னேற மாட்டேன் என்கிறது” என்று இணையவாசிகள் சாடி வருகின்றனர். அந்தச் செடித் தொட்டிகளின் விலை வெறும் 100 ரூபாயாகக் கூட இருக்கலாம், ஆனால் அதற்காகத் தனது மரியாதையை அந்தப் பெண் இழந்துவிட்டதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
