போபால் எய்ம்ஸ் மருத்துவமனை லிப்டில் பெண் மருத்துவர் ஒருவரிடம் மர்ம நபர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவர் லிப்டில் ஏறும்போது, அவருடன் வந்த ஒரு நபர் லிப்ட் கதவு திறந்ததும் திடீரென அவர் கழுத்தில் இருந்த சங்கிலியைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினார். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
AIIMS भोपाल के अंदर का हाल।
महिला डॉक्टर से चेन छीनीं। दिल्ली से भोपाल तक इन दिनों घर और अस्पताल के अंदर ऐसी लूटपाट दिखने लगी है। pic.twitter.com/doihJI3Q30
— Narendra Nath Mishra (@iamnarendranath) January 26, 2026
🚨⚡️A 73-year-old man was assaulted by one of the thugs when he entered the elevator in front of his wife…
But he didn't know who he was dealing with, and he learned his lesson. pic.twitter.com/hVbagOA6WA
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) January 26, 2026
டெல்லி மற்றும் போபால் போன்ற நகரங்களில் வீடுகள் மற்றும் மருத்துவமனை போன்ற பாதுகாப்பான இடங்களிலேயே இது போன்ற துணிகரக் கொள்ளைச் சம்பவங்கள் நடப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மருத்துவர்கள் பணிபுரியும் இடத்திலேயே பாதுகாப்பு இன்றி இருப்பது பெரும் கவலையை அளிக்கிறது. இந்த வீடியோவைப் பகிரும் பலரும், மருத்துவமனை வளாகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
